உன்னை நான் கடைசியாக எடுத்த புகைப்படம்: யாஷிகாவின் உருக்கமான பதிவு
பிரபல நடிகை யாஷிகா இறந்த தனது தோழியை கடைசியாக எடுத்த புகைப்படத்தினை மிகவும் உருக்கத்துடன் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து குறித்த விபத்தில் அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிசிச்சையில் பெற்று சற்று உடல்நலம் தேறி வருகின்றார்.
இந்நிலையில் தோழியின் நினைவிலே வாடும் யாஷிகா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் தோழி பவனியின் புகைப்படத்தை வெளியிட்டு, "நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. தயவு செய்து மீண்டும் வந்துவிடு என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி யாஷிகா கடைசியாக தோழியை எடுத்த புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.