விபத்திற்கு பின்பு யாஷிகாவின் முதல் பதிவு: இறந்த தோழியைக் குறித்து கூறியது என்ன? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
கடந்த சில நாட்களுக்கு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தனது முதல் பதிவினை வெளியிட்டுள்ளார்.
தனது நண்பர்களுடன் காரில் சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில், யாஷிகாவின் தோழி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
யாஷிகா மீது பொலிசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தோழி பவானியின் இறப்பு தெரியாமலேயே இருந்துள்ளது.
இப்படியொரு நிலையில் விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார்.
மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இவ்வாறான பெரிய விபத்திலிருந்து மீட்ட கடவுளுக்கு நன்றி சொல்வதா? எனது தோழியை என்னிடமிருந்து பிரித்துக்கொண்ட கடவுளை பழிப்பதா? ஒன்றும் தெரியவில்லை.
ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்வேன்... நீ என்னை மன்னிக்க மாட்டார் என்பது தெரியும் என்னை மன்னித்துவிடு உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன்.
ஆனால், உன்னை ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்வேன். உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்பி வந்து விடுவாய் என்று தான் பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன்னுடைய குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றும் உன்னுடைய நினைவுகளை நினைத்து பூரிப்படைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதே போன்று தனது பிறந்தநாள் குறித்து கூறுகையில், நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை. என்னுடைய ரசிகர்களும் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அவரின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் தான் அவர்களுக்கு பலத்தை கொடுக்க வேண்டும். என் வாழ்வில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு. என்றாவது ஒரு நாள் என்னை மன்னித்துவிடு என்று பதிவிட்டிருக்கிறார்.
யாஷிகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் யாஷிகாவிற்கு ஆறுதல் சொன்னாலும் பெரும்பாலானோர் யாஷிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
அதிலும், உங்கள் பிறந்தநாளை பற்றி இப்போ யார் கேட்டது என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த பதிவு இரங்கல் பதிவு போல தெரியவில்லை. உங்கள் மேல் உள்ள தவறை மறைக்க போட்ட பதிவு போல தான் இருக்கிறது என்றும் திட்டி தீர்த்து வருகின்றனர்.