குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தினேனா? கேவலப்படுத்தாதீங்க என கண்ணீர் விட்ட யாஷிகா
நடிகை யாஷிகா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது விபத்து குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விபத்திற்கு பல காரணங்கள் கூறி வந்தாலும், பலரும் யாஷிகா ஆனந்த் குடிபோதையில் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இதற்கு யாஷிகா ஆனந்த் நான் குடிபோதையில் ஒட்டியிருந்தால் எப்படி என்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து இருப்பார்கள் என விளக்கம் அளித்துள்ளார்
காவல்துறையின் ரிப்போர்ட்டில் கூட தாங்கள் மது அருந்தவில்லை என்பது போன்று தான் பதிவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் பொய்யான செய்திகளை வெளியிட்டுயுள்ள மீடியா மீது வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பு இதே போன்று குடிபோதையில் விபத்து ஏற்படுத்தினேன் என்று புரளி கிளம்பியது. அப்படியான நபர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது போன்றும் யாஷிகா பதிவிட்டுள்ளார்.
டாக்டரிடம் இருந்து பெறப்பட்ட மெடிக்கல் ரிப்போர்ட்டை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது யாஷிகா ஆனந்த் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்றொரு தரப்பினர் அவருக்கு உடல்நலத்தைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.