9 மாத கர்ப்பிணியாக கருதப்பட்ட இளம் பெண் வயிற்றிலிருந்து 13 அங்குல நீர்க்கட்டி அகற்றப்பட்டது!
9 மாத கர்ப்பிணியாக கருதப்பட்ட இளம் பெண் வயிற்றிலிருந்து 13 அங்கலத்தில் பந்து போல் இருந்த நீர்க்கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அபி (19) என்ற இளம் பெண்ணின் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக ஆரம்பித்தது. இதனால் அவளது உடல் எடை அதிகரித்தது. அவளது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவள் கர்ப்பமாக இருப்பதாக நினைத்தனர்.
இதனால் தன்னுடைய பெரிய இடுப்பைப் பற்றி கவலை அடைந்தாள் அபி. இதற்காக உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டு சுமார் 6 கிலோ வரை உடல் எடையை இழந்தாள். ஆனாலும், இடுப்பு பகுதி குறையவே இல்லை.
ஒரு துண்டு ரொட்டியை சாப்பிட்டபோது, அவள் முழுதாக உணர ஆரம்பித்தாள். தன் வயிற்றில் ஏதோ தவறு இருப்பதாக அபி உணர்ந்தாள். அப்போது, அவள் மருத்துவ உதவி பெற முடிவு செய்தாள்.
இதனால், கடந்த மார்ச் மாதம் அபி மருத்துவரிடம் சென்றார். அப்போது, மேற்கொள்ளப்பட்ட ஸ்கேனில் அவளது வயிற்றில் 13 அங்குல நீர்க்கட்டி உள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதனால்தான், வயிறு வீங்கியதற்கான காரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கட்டி கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள வால்சல் மேனர் மருத்துவமனையில் அபிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வயிற்றில் இருந்த 13 அங்குல நீர்க்கட்டியை வெற்றிகரமாக மருத்துவர்கள் நீக்கினர்.
இது குறித்து தனது அனுபவத்தை அபி பகிர்ந்தார். அப்போது அவர் பேசுகையில், நான் ஒரு சிறு ரொட்டி சாப்பிட்ட போதுதான் ஏதோ என் வயிற்றில் தவறு இருப்பதாக உணர்ந்தேன்.
என்னை அனைவரும் கர்ப்பமாக இருக்கிறியா என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். என்னால் சாப்பிட கூட முடியவில்லை. மிகவும் மன வேதனை அடைந்தேன். எனக்கு மட்டும் தான் தெரியும் நான் கர்ப்பமாக இல்லை என்று. நான் கொழுப்பாக இருப்பதாக தான் நினைத்தேன். என்னால் எந்த வேலையையும் சரிவர செய்ய முடியவில்லை. என் வயிற்றில் கட்டி வளர்ந்தது எனக்கு தெரியாது என்றார்.

