உலக சாதனையில் இடம்பிடித்த 4.25 கிலோ எடை கொண்ட மாம்பழம்! விவசாய தம்பதியினருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்
விவசாயம் செய்து வரும் கொலம்பிய தம்பதி மாம்பழ ஆர்வலர்களுக்கு ஒரு மிகப்பெரிய மேங்கோ ஆச்சர்யத்தை கொடுத்துள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் உலகின் மிகப்பெரிய மாம்பழத்தை அறுவடை செய்து கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளனர்.
It's mango-licious! The world's heaviest mango has just been discovered in Colombia 😛🥭
— Guinness World Records (@GWR) April 29, 2021
Read the full story! https://t.co/QAtWHX2Vfg pic.twitter.com/J20NJlxDQb
இவர்கள் வளர்க்கும் மாமரத்தின் மூலம் கிடைத்த ஒரு மாம்பழத்தின் எடை 4.25 கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவின் குயாட்டா எனும் பகுதியில் வசித்து வரும் ஜெர்மன் ஆர்லாண்டோ நோவா மற்றும் ரெய்னா மரியா மரோக்யூன் ஆகியோரால் வளர்க்கப்பட்ட இந்த பிரமாண்டமான பழம், போயாகா பகுதியில் உள்ள சான் மார்டினில், ஏப்ரல் 29 அன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஒரு இடத்தைப் பிடித்தது.
இதற்கு முன்னதாக 2009ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட 3.435 கிலோ எடையுள்ள ஒரு மாம்பழத்தின் சாதனையை இவர்களின் மாம்பழம் முறியடித்துள்ளது.
இந்த சாதனை குறித்து கின்னஸ் உலக சாதனைகளுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் கருத்து வெளியிட்டுள்ளது, ஜெர்மன் ஆர்லாண்டோ நோவா மற்றும் ரெய்னா மரியா மரோக்யூன் தம்பதிகள் வளர்த்த மாம்பழத்தின் கனமான அளவைக் கண்டபின் உலக பதிவுகளுக்காக இணையத்தில் ஆராய்ச்சி செய்துள்ளார்.
மேலும் இணையத்தில் கிடைத்த தகவல்களை சேகரித்த பின்னர், அவர்களின் மாம்பழத்தை எடைபோட்டு பார்த்துள்ளனர்.
அதில் ஏற்கனவே உலக சாதனை படைத்த மாம்பழங்களை விட அவர்களின் மாம்பழமே உலகிலேயே கனமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்பின்பு இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.