திக்திக் நிமிடங்கள்.. சில வினாடிகளில் நபரை காவு வாங்க சென்ற ராஜநாகம்- வைரலாகும் காணொளி
சில வினாடிகளில் இளைஞரின் உயிரை காவு வாங்க காத்திருந்த ராஜ நாகத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நாஜ நாகம் பார்த்த வேலை
கடந்த சில நாட்களாக பாம்புகளின் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மலைபாம்பு அளவில் இருக்கும் ராஜநாகத்தை இளைஞர் ஒருவர் காட்டில் வைத்து பிடிக்க முயற்சிக்கிறார்.
அந்த நாகமும் எப்படியாவது தப்பித்து சென்று விடலாம் என அங்குமிங்கும் செல்கிறது. பாம்பிற்கு ஈடுக் கொடுத்து இளைஞர் போராடுகிறார்.
இறுதியாக பொறுமையை இழந்த பாம்பு, குறித்த இளைஞர் கடிப்பதற்காக சீறுகிறது. அந்த பிடியிலும் இளைஞர் தப்பி விடுகிறார். இந்த காட்சியை பார்ப்பதற்கு அவ்வளவு பயமாக உள்ளது. ஏனெனின் நம் முன் ஒரு ராஜநாகம் இருக்கிறது என நினைக்கும் பொழுதே சிலிர்க்கிறது.
அப்படி இருக்கும் அவ்வளவு பெரிய நாகத்தை குறித்த இளைஞர் பிடிப்பதற்கு முயற்படுவது ஆச்சர்யமாக உள்ளது.
இந்த காணொளியை பாம்பை கண்டாலே 10 அடி தள்ளி நடக்கும் பயனர்களுக்கு இணையவாசிகள் பகிர்ந்து, கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |