வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்யும் பெண்களுக்கு இவ்வளவு ஆபத்தா? பலருக்கும் தெரியாத விடயம்
இன்றைய கொரொனா காலத்தில் அலுவலக வேலைகளை செய்து வந்த நபர்கள் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர்.
ஒரு பெண் வேலை செய்வது என்பது எளிதான விஷயம் இல்லை. குடும்ப பொறுப்புகளையும் சுமந்து கொண்டு, அலுவலக வேலைகளையும் திறம்பட நிர்வகிக்கும் ஒரு தாயின் வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்று.
சில மாதங்கள் மட்டுமே சமாளிக்க முடியும். ஏனெனில் வீட்டிலேயே இருப்பதால் 24 மணி நேரமும் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கவனிப்பது போன்ற தினசரி வேலைகளுக்கு மத்தியில், அலுவலக வேலைகளை சரிவர செய்வது மற்றும் வேலை - தனிப்பட்ட வாழ்க்கையை பேலன்ஸ் செய்வது கடினமான பணியாக மாறிவிட்டது.
வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்யும் போது கூடவே வீட்டு பொறுப்புகளையும் சேர்த்தே செய்ய நேரிடுவதால், தொழில் வாழ்க்கையில் அவர்கள் முன்னே இருக்கும் பல சாத்தியமான வாய்ப்புகளை அவர்களால் வெற்றிகளாக மாற்ற முடிவதில்லை.
கொரோனா தொற்றில் குழந்தைகளும் ஆன்லைன் மூலமாக படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் அருகில் ஒருவர் அமர்வது கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்கள் மீதே விழுகின்றது. ஒருபுறம் குழந்தைகளின் ஆன்லைன் மற்றொரு புறம் தாங்களும் அலுவலக வேலைகளை கவனிப்பது பெண் ஊழியர்களுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்யும் பெண்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிப்பு ஏற்படுகின்றது. போதுமான ஓய்வு கிடைக்காத சூழலில் பெண்களின் உடல் ஆற்றல் அதிவிரைவாக வெளியேறி மிகவும் சோர்வுக்கு உள்ளாகின்றனர்.
அலுவலகம் சென்றால் 8 மணிநேரம் வேலை என்றால் வீட்டில் இருந்து பார்க்கையில், கூடுதலாக வேலை செய்கின்றனர். குடும்ப பொறுப்புகள் பெண்களுக்கு ஓய்வளிப்பதில்லை. இதனால் அதிக சோர்வு, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் உள்ளிட்டவை பெண்களிடையே அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.
அலுவலகம் செல்லும் போது அங்கிருக்கும் சக ஊழியர்களுடன் சிரித்து, பேசி அரட்டை அடித்து கொண்டே வேலை பார்க்கும் சுவாரசியங்கள், சமூககூட்டங்கள், பல மீட்டிங்குகள் உள்ளிட்ட பலவற்றை வீட்டிலேருந்தே வேலை பார்க்கும் பெண்கள் இழப்பதால் சக ஊழியர்களுடனான தொடர்பு மிகவும் குறைந்து போகிறது. இது அவர்களின் செயல்திறனை சில நேரங்களில் பாதிக்கிறது.