பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள சரியான வயது என்ன?
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் மிக முக்கியமான காலம். இரண்டு உயிர் என்று கூறி கூறி அதிக உணவு சாப்பிட்டிருப்போம். ஹார்மோன் மாற்றம், அதிக ஊட்டச்சத்தான உணவு, உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்களால் உடல் எடை தாறுமாறாக அதிகரித்துவிடுகிறது.
மேலும், குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கு பாலூட்டுவதற்காக சத்தான உணவை எடுக்க வேண்டியுள்ளது. டயட், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் மாற்றங்கள் தாய்ப்பாலின் வழியாக குழந்தையை பாதிக்கலாம் என்பதால் பலரும் பிரசவத்துக்கு பிறகு டயட், உடற்பயிற்சியை தொடங்குவது எப்போது என்ற குழப்பத்திலேயே உள்ளனர்.
இதனையடுத்து, பொதுவாக 30 வயதுக்கு உட்பட்ட காலத்தையே பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்ற காலம் என்று மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. கரு முட்டையின் தரம் குறைய ஆரம்பிக்கிறது. எனவே, 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.
அதிகபட்சம் 35 வயதுக்குள் பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு உடல் நிலை எல்லாம் சரியாக உள்ளதா என்று பரிசோதனை செய்துகொள்வது எல்லாம் தேவையில்லை. கருத்தரிப்பில் தாமதம் ஏற்பட்டால் அந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ஹார்மோன் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.
மகப்பேறு மருத்துவரை அணுகி ஃபேலேட், இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்ற அதீத அக்கறை காரணமாக பெண்கள் உடற்பயிற்சி செய்வது இல்லை.
கர்ப்பம் தரித்ததில் இருந்து 12வது வாரத்திற்கு பிறகு உடற்பயிற்சி செய்யலாம்.
எளிய யோகா பயிற்சிகளை செய்யலாம். எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் நடைப்பயிற்சியாவது செய்யலாம். கருச்சிதைவு உள்ளிட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள பெண்கள் தங்கள் மருத்துவர் ஆலோசனை படி நடந்துகொள்ள வேண்டும்.