நள்ளிரவில் அடித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்: பின்னணியில் பகீர் காரணம்
விழுப்புரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் நள்ளிரவில் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள காரணை பெரிச்சானூரை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் செங்கல் சேம்பரில் வேலை செய்து வரும் நிலையில், அப்பகுதியில் இருந்த நாராயணன் என்பவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுஅருந்திய போது, மாணிக்கம் மற்றும் நாராயணன் இடையே தகராறு ஏற்பட்டதை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ஆத்திரம் அடங்காத நாராயணன் தனது மனைவி மற்றும் மகன் மணிகண்டன், சகோதரர் முருகன் என 6 பேருடன் சேர்ந்து நள்ளிரவில் நாராயணன் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் மாணிக்கத்தின் மனைவி லட்சுமி அவர்களைத் தடுத்த போது, அவரையும் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.