300 அடி குன்றில் இருந்து காருடன் விழுந்த பெண் ..! அதிர்ச்சி காணொளி
மலைப்பகுதியில் காரை பின்நோக்கி செலுத்த முற்பட்ட பெண் காருடன் மலையில் இருந்து விழும் பதர வைக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
மகாராஷ்டிராவில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில், ஸ்வேதா தீபக் சர்வாஸ் என்ற இளம் பெண் தனது காரை ஒரு குன்றின் மீது திருப்பி 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி முழுவதையும் அவரது நண்பர் சூரஜ் சஞ்சாவ் முலே என்பவர் கேமராவில் படம்பிடித்துள்ளார். தன் கண் முன்னால் நடந்த இந்த கோர சம்பவத்தை அவர் தடுக்க முயன்றும் முடியவில்லை. குறித்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருவதுடன் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |