மகிழ்ச்சியாக இருந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! நொடியில் வலியால் துடித்துடித்த அவலம்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதமான விஷயம் ஒன்றினை பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேக்கில் அவரது முகத்தை வைத்ததால் பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரிகிறது.
புகைப்படத்தில் அவர் கண்ணுக்கு மேலே ஒரு காயம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். பேஸ்புக்கில் இந்த சம்பவம் குறித்த மூன்று புகைப்படங்களை அன்டோனியோ லாகிங்கர் என்பவர் ஷேர் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்களில் முதலில், பிறந்தநாளன்று வெட்டிய கேக்கில் ஒரு மரக்குச்சி ஒன்று நீண்டு கொண்டிருப்பதைக் காணலாம். இரண்டாவதாக, ஒரு மரக்குச்சி பெண்ணின் கண் இமைகளுக்கு சற்று மேலே உள்ளது.
மூன்றாவது புகைப்படத்தில், அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட காயத்தின் மீது கட்டு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது பிறந்தநாளைக் கொண்டாட கேக் வெட்டியபோது இந்த கொடூரமான சம்பவம் நடந்ததாக அன்டோனியோ லாகிங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, அவளுடைய நண்பர்கள் அவளுடைய முகத்தை கேக்கில் அமுக்கியுள்ளனர். அப்போது அது ஒரு அடுக்கு கேக் என்பதால், அதிலிருந்த மரக்குச்சி ஒன்று அவளது கண் பகுதியில் சிக்கி, உடனடியாக இரத்தம் வெளியேறத் தொடங்கியது.
அவள் திடீரென வலியால் துடித்ததால், அவளது நண்பர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவரது கண் பகுதியில் இருந்த மரக்குச்சியை அகற்றினர். மருத்துவர்களின் கூற்றுப்படி, காயமடைந்த இடத்திலிருந்து சில அங்குல தூரத்தில் தான் அவரது கண் இருப்பதாகும், அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்துள்ளனர், இல்லையென்றால் அவரது கண் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தனர்.
கேக் விற்பனையாளர்கள் சிலர், அடுக்கு கேக் தயார் செய்யும் போது, மரத்துண்டு, உலோகம் அல்லது பிளாஸ்டிக் குச்சிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இதுபோல அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் இதுபோல செய்யக்கூடாது.