ஒரே நாளில் 4000 மேற்பட்ட போன்கால் - ஆடிப்போன இளம்பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
இளம்பெண் ஒருவருக்கு ஒரே நாளில் 4 ஆயிரம் மேற்பட்ட போன்கால் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின், வடக்கு பாங்கூரை சேர்ந்தவர் ஹெலன். இவர் முதலுதவி பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனையடுத்து, இந்த சூழலில் அவரது செல்போனுக்கு திடீரென நிறைய அழைப்புகள் வந்துள்ளது.
இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இந்த போன்கால் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் அவருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருந்துள்ளது.
இதன் பின்னர் தான் இதற்கான காரணத்தை அவர் கண்டுபிடித்துள்ளார். அது என்னவெனில், ஸ்பெண்ட் லோக்கல் என்ற உதவிமையத்தின் நிறுவனத்தை தொலைபேசி எண்ணும் ஹெலனின் தொலைபேசி இன்னும் ஒரே ஒரு நம்பர் தான் வித்தியாசம் உள்ளது.
இதனை அந்த நிறுவனம் சரியாக கவனிக்காமல் தவறுதலாக ஹெலனின் நம்பரை விளம்பரத்திற்கு கொடுத்துள்ளது. இதனைக்கண்ட பலரும் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ஹெலன், உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதன்பின்னர் அந்த நிறுவனம் ஹெலனிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.