மகனை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை புலி! அடுத்த நொடியே தாய் செய்த காரியம்- நெஞ்சை கலங்கவைக்கும் சம்பவம்
இந்தியாவில் தன்னுடைய மகனை காப்பாற்ற சிறுத்தைப் புலியிடம் தாய் ஒருவர் சண்டையிட்ட சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் கிரண் பாய்கா என்ற பெண்ணே சிறுத்தை புலியிடம் சண்டையிட்டுள்ளார், தன்னுடைய 8 வயது மகனான ராகுலை சிறுத்தை புலி கவ்விச் சென்றதை பார்த்தவுடன், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றார்.
சிறுத்தையை நெருங்கியதும், ஒரு குச்சியை எடுத்து தாக்க முயன்ற போது, ராகுலை விட்டுவிட்டு கிரண் பாய்கா மீது பாய்ந்துள்ளது.
தொடர்ந்து சிறுத்தை புலியிடம் சண்டையிட்டுள்ளார், இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர சிறுத்தை புலி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட கிரண் பாய்கா மற்றும் ராகுலை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த தகவல்கள் காட்டுத்தீப் போல் பரவ கிரண் பாய்காவின் தாய் பாசத்தை அறிந்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
The woman of the village saved her little child from the leopard, this would have been the mother of real India (the land of Shivaji Maharaj)
— Odd-Purush (Odd Man) (@prevaildatruth) December 1, 2021
Not like today's gentle mother who is busy eating pizza burger and her lust, who shouts help me help me every time. #IndianMother pic.twitter.com/o5V0VRhvtZ