இறந்த கணவரின் சாம்பலை சாப்பிட்டு உயிர் வாழும் வினோதமான பிரித்தானிய பெண்! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இறந்த கணவரின் சாம்பலை மனைவி சுவைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் கேஸி (cassie), இவருக்கும் சீயன் (sean) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டும் திருமணம் நடைப்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நிலையில், கணவர் சீயனிற்கு சமீபத்தில் ஆஸ்துமா குறைபாடு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அதன் பின்னர், அஸ்தி வைத்துக்கொண்டிருந்த மனைவி, தான் எல்லா இடங்களுக்கும் சுற்றி வருவதாக கூறி வருகிறார்.
இந்நிலையில், அவர் அஸ்தியை அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்வதால், இது சாதரணமான விஷயமாக எடுத்துக்கொண்டாலும், அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்த அஸ்தியின் சாம்பலை அடிக்கடி சாப்பிட்டும் வருகிறார்.
வழக்கமாக உணவு அருந்துவதுபோல ஒரு நாளைக்கு சராசரியாக 6 முறையாவது அஸ்தியை சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.
இச்செய்தியானது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், கணவரின் மீதான அன்பால் இதை செய்து வருகிறார் என பலரும் கூறி வருகின்றனர்.