நிம்மதியா சாப்பிட விடுங்கடா... நொடியில் சிலையாக மாறிய அழகி... அடுத்த நொடியே பெண்ணின் ரியாக்ஷன பாருங்க!
இந்தியாவில் திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கு புகைப்படக் கலைஞர்களை அழைத்து போட்டோ, வீடியோக்களை எடுக்கின்றனர்.
இதில் பெரும்பாலும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ரக பர்ஃபாமென்ஸ் தான் அதிகம் இருக்கும். இந்தியாவில் நடக்கும் விசேஷங்களில் சாப்பாடு பிரதானமானது.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் உணவு இருக்கும். அவர்களுக்கென ஒரு பாரம்பர்யம் இருக்கும்.
வாழை இலையில் வைக்க இடம் இல்லாமல் பக்கத்து இலையை கடன் வாங்கும் அளவுக்கு உணவுகளை அடுக்கும் ஊர்களும் உண்டு.
விசேஷ நிகழ்வுக்கு வரும் ஒரு சில புகைப்படக்காரர்கள் இயல்பாக போட்டோ எடுக்கிறேன் என்ற பெயரில் சாப்பிடும் இடத்திற்கு கேமராவுடன் ஆஜராகிவிடுவார்கள்.
எதோ தூரத்தில் இருந்து எடுத்தால் கூட பரவாயில்லை. நேராக முகத்துக்கு முன்பாக கேமராவுடன் ஆஜராகிவிடுவார்கள்.
அப்படி இளம்பெண் ஒருவர் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.