அலாரமே இல்லாமல் அதிகாலையில் எழும்ப வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ்
அதி காலையில் அலாரம் இல்லாமல் எவ்வாறு எழுந்திருக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பகலில் வேலை செய்துவிட்டு, இரவில் உடம்பிற்கு ஓய்வு கொடுப்பதற்கு தூக்கம் என்பது மிக அவசியமாகும்.
அவ்வாறு இரவு தூங்கிய பின்பு அதிகாலையில் எழும்ப பலருக்கும் கஷ்டமாக இருக்கும். சீக்கிரம் எழுந்திருக்கு அலாரம் வைத்து தூங்கினால் அதனை அணைத்து விடுவார்கள்.
இந்நிலையில் அலாரம் இல்லாமலேயே அதிகாலையில் எவ்வாறு எழும்பலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதிகாலையில் எழுந்திருக்க சூப்பர் டிப்ஸ்
ஒவ்வொரு நாளும் தூங்கும் நேரத்தினை மாற்றாமல் வழக்கமான சுழற்சியை உருவாக்குவது அவசியமாகும். இந்த வழக்கத்தினை வார இறுதி நாட்களிலும் பின்பற்ற வேண்டும்.
வார இறுதி நாட்களில் நேரத்தினை மாற்றினால், இது உங்கள் உடலின் உள் கடிகாரத்தை குழப்பிவிடும். ஆதலால் அனைத்து நாட்களிலும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.
தற்போதைய டிஜிட்டல் உலகில், நடு இரவில் கூட மொபைல், லேப்டாப் இவற்றினை அவதானித்து வருகின்றனர். இது தவறான செயலாகும். இதிலிருந்து வரும் நீல ஒளியானது துாக்கத்தை பாதிக்கும். மேலும் மெலடோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியைக் குறைத்து தூக்கத்தில் பிரச்சனை ஏற்படுத்தும்.
படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு கட்டாயம் மொபைல், லேப்டாப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தூங்கும் முன் உங்கள் மூளைக்குச் சவால் தரும் கடினமான கணக்குகள் அல்லது வேலைகள் செய்வதைத் தவிர்க்கவும்.
தூங்கும் அறையில் வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் சிறு வெளிச்சம் கூட தூக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம். ஐ மாஸ்க் கூட பயன்படுத்திக் கொள்ளவும்.
காலை எழுந்ததும் வெளிச்சத்தினை கட்டாயம் பார்க்க வேண்டும். அதாவது சூரிய ஒளி உங்கள் கண்களில் படும்போது, உங்களது உடல் விழித்துக் கொள்ள தயாராகின்றது என்ற சமிக்ஞையை மூளைக்கு அனுப்புமாம்.
காலையில் சீக்கிரம் எழுந்து ஒரு நடைப்பயிற்சிக்குச் செல்வது, அல்லது உங்கள் பால்கனியில் நின்று சூரிய ஒளியில் நிற்பது கூட உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
தூங்குவதற்கு முன்பு கனமான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பாக எண்ணெய் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவினை தவிர்க்கவும்.
தூங்குவதற்கு குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துவிடுங்கள். பசிக்கும் பட்சத்தில், ஒரு சிறிய பழம் அல்லது சில நட்ஸ் போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |