கணவர் கண்முன்னே அடுத்தவருடன் சென்ற மனைவி: சிறிது நேரத்தில் வந்த போன்! நடந்தது என்ன?
தவறான தொழிலில் ஈடுபட்டு வந்த பெண் ஹொட்டல் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் முகமது ஷாஹித் என்ற நபர் தன்னுடைய மனைவியோடு வசித்து வந்தார்.
ஷாஹித்துக்கு சரியான வருமானமில்லாத காரணத்தில், அவரது மனைவி தவறான தொழில் செய்து சம்பாதித்து வந்துள்ளார். இதனை கணவரும் தடுக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணை அதே பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ட்ரைவர் ரிங்கு என்பவர் கடந்த வாரம் ஒரு நாள் இரவு குருகிராமில் அதுல் கட்டாரியா சவுக் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு கூட்டி சென்றுள்ளார்.
அதன் பின்பு அந்த பெண்ணை சச்சின் என்பவரும் அங்கு சந்தித்து ஒரு ரூமை புக் செய்துள்ளனர். இந்நிலையல் ஹொட்டல் அறையில் மனைவி பிணமாக கிடப்பதாக கணவருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
அங்கு வந்த அவரின் கணவர் பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில், கொலை நடந்த ஹொட்டலில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த பெண்ணை கடைசியாக அந்த ஹொட்டல் அறையில் சந்தித்த சச்சின் என்பவர் கொலை செய்திருக்கலாம் என்று கிடைத்த தகவலின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.