விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா!
vijay-sangeetha : முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சமீபத்தில் அந்த மனுவை அவர் வாபஸ் பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் - சங்கீதா
கடந்த 1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி முன்னணி நடிகராக உயர்ந்தவர். தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக கடமையாற்றி வருகின்றார்.

தனது தீவிர ரசிகையான சங்கீதாவையே திருமணம் செய்து கொண்ட அவர், ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திரத் தம்பதிகளில் ஒருவராகவும் திகழ்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக சங்கீதா, விஜய்யிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவதாகக் கூறி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.

விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இதுவரை மூன்று முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மூன்றாவது விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா, சங்கீதாவிடம் சுமார் 20 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, தான் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சங்கீதா நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இந்த திடீர் மனமாற்றத்துக்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சங்கீதாவின் மனமாற்றத்துக்கு இது தான் காரணமா?
முதலாவதாக, சங்கீதாவுடனான திருமண உறவு முறிவதை விஜய் ஆரம்பம் முதலே விரும்பவில்லை என்றும், குடும்பம் மீண்டும் ஒன்றாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், அவர்களது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகிய இருவரும் பெற்றோர் பிரிவதை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஜேசன் தனது தந்தையுடனும், திவ்யா பெற்றோர் இருவரிடமும் தொடர்ந்து பேசி, அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த மனக்கசப்பை போக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கீதாவின் மனக்கசப்புக்கு சில தவறான நபர்களின் ஆலோசனைகளும் காரணமாக இருந்ததாகவும், அவர்களின் தேவையற்ற பேச்சுகளால் விஜய் மீது அவருக்கு தவறான புரிதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தினரின் அறிவுறுத்தலை ஏற்று, அந்த நபர்களுடனான தொடர்பை சங்கீதா முற்றிலுமாக துண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மன அழுத்தத்தில் இருந்த காலகட்டத்தில் சங்கீதா, தங்களது திருமண வீடியோக்கள், சீமந்த புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுடன் விஜய் மகிழ்ச்சியாக செலவிட்ட பழைய தருணங்களின் புகைப்படங்களை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நினைவுகள் அவருக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியில், பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களது மனநிலையை கருத்தில் கொண்டு சங்கீதா தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சினிமா வட்டாரங்களிலும், குடும்பத்திற்கு நெருக்கமானவர்களிடையேயும் பேசப்பட்டு வருகின்றன.

விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், குறுகிய காலத்திலேயே தனது முடிவை மாற்றிக்கொண்டு சங்கீதா அந்த மனுவை வாபஸ் பெற்றிருப்பது, விஜய் – சங்கீதா தம்பதியினர் மீண்டும் இணைந்திருக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |