அரிசியை ஊறவைக்காமல் சமைத்தால் ஆபத்து? சமைக்கும்முன் ஏன் ஊறவைக்க வேண்டும் தெரியுமா?
அரிசி நமது அன்றாட உணவாகும், தென்னிந்தியாவில் ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசியை உணவாக எடுத்துக்கொள்வதை பார்க்கலாம்.
அந்த அளவில் நமது உணவில் அரிசிக்கு முக்கிய பங்குண்டு, ஆனால் அரிசி உண்பதால் புற்றுநோய் ஏற்படும் என்பது பலருக்கு திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம்.
ஏன் அரிசியால் அப்படி ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்.
- நவீன விவசாயத்திற்கு முன்பெல்லாம் இயற்கை விவசாயம் செய்யப்பட்டதால் ஆரோக்கியமான உணவுகள் மக்களுக்கு கிடைத்தன, ஆனால் மாறிவரும் காலநிலை மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக அதிகமான விளைச்சல் தேவைப்படுகிறது
- எனவே இப்போது செயற்கை விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
- இதனால் நாம் உண்ணும் உணவானது ரசாயனத்தின் கலவையாக மாறியுள்ளன.
- எனவே நமக்கு தெரியாமலே நாம் அதிகமான அளவில் கெடுதல் தரும் உணவுகளை எடுத்து கொள்கிறோம், அவை எதிர்க்காலத்தில் நிறைய பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகின்றன.
- மேலும் இது இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் புற்றுநோயையும் ஏற்படுத்தவும் கூட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
ஆய்வு
இங்கிலாந்தில் மேற்க்கொண்ட ஒரு ஆய்வில் “நாம் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள இராசயனமானது அரிசியை ஆபத்தானதாக மாற்றுகிறது. இது சில சமயங்களில் அரிசிகளில் ஆர்சனிக் விஷத்தை உண்டாக்கிறது. இதனால் அரிசி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உணவாக மாறுகிறது என கூறப்படுகிறது.
இதற்கு என்ன மாற்று வழி? இதற்காக அரிசி உண்பதை நாம் நிறுத்த வேண்டுமா? என நீங்கள் சிந்திக்கலாம். நாம் அந்த அளவிற்கு போக தேவையில்லை, இப்போதைய உணவு கலாச்சாரத்தில் நம் உணவில் இருந்து அரிசியை நீக்குவது கடினமான காரியம். அதற்கு முன்பாக ஆர்சனிக் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
அது உடலுக்கு என்ன மாதிரியான தீங்கை ஏற்படுத்தும் என்பதை அறிவதன் மூலம் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
ஆர்சனிக் என்றால் என்ன?
ஆர்சனிக் என்பது பல்வேறு கனிமங்களில் இருக்கக்கூடிய ஒருவகை இரசாயனமாகும். இது விவசாயத்தில் அல்லது மற்ற துறைகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் காணப்படுகிறது, பூச்சிக்கொல்லிகளின் முக்கிய பகுதியாக இந்த ஆர்சனிக் உள்ளது. பல நாடுகளின் நிலத்தடி நீரில் அதிகமான அளவில் ஆர்சனிக் உள்ளன.
இந்த ஆர்சனிக் மிகவும் மோசமானதாகும். உணவு அல்லது தண்ணீரில் கலக்கும்போது அவற்றை விஷமாக்கும் தன்மை கொண்டது ஆர்சானிக். இதனால் வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
அதிகப்பட்சமாக இதனால் இதயத்தில் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஆர்சனிக் ஆனது பூச்சிக்கொல்லி மருந்துகளில் பயன்படுத்தப்படுவதால் பூச்சிக்கொல்லி வழியே தாவரங்களுக்கும் அதில் விளையும் தானியங்களுக்கும் இது பரவுகிறது. இப்படிப்பட்ட ஆர்சானிக் நாம் உண்கிற அரிசியில் அதிகமாக உள்ளது.
எனவே சரியான முறையில் அரிசியை நாம் கழுவி சமைக்கவில்லை எனில் எதிர்காலத்தில் பெரும் உடல் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சமைக்கும் முறை
இனி அரிசியை சமைக்கும்போது இரண்டு விஷயத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்வோம்.
ஒன்று அரிசியை விட ஐந்து பங்கு அதிகமான நீரில் அரிசியை அலசலாம், அல்லது 3 முதல் 4 மணி நேரங்கள் அரிசியை ஊற வைத்து அதன் பிறகு சமைக்கலாம். முதல் முறையை விடவும் இரண்டாம் முறை அதிக பலன் தரக்கூடியது. இதனால் ஆர்சனிக் பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் பாதுக்காத்துக்கொள்ள முடியும்.