ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்!
சில தினங்களுக்கு முன்னர் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகிய சம்பவம் உலக மக்களயே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன் பின்னர், ஆபத்துக் காலங்களில் ஏன் பயணிகளுக்கு பாராசூட் கொடுத்து தப்பிக்க வைப்பதில்லை என்ற ஒரு சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்ருக்க கூடும்.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
உண்மையில் சாதாரணமாக சிந்திக்கும் போது விமான பயணிகளுக்கு பாராசூட் கொடுத்தால் ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று தோன்றலாம். ஆனால் அவ்வாறு விமான பயணிகளுக்கு பாராசூட் கொடுக்கப்படாமைக்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன என்பதை பற்றி நிச்சயம் அறிந்துக்கொள்ள வேண்டும்.
பாராசூட்
விமானம் என்பது பல காரணிகளை சமநிலையில் வைத்து செயல்படும் ஒரு சிக்கலான இயந்திரம். விமானம் பறக்க உந்துவிசை, உயர்த்து விசை, எதிர் விசை மற்றும் எடை ஆகிய நான்கு முக்கிய விசைகள் செயல்பட வேண்டும். குறித்த விசைகளின் சமநிலை காரணமாகவே விமானம் வானில் பறக்க முடிகின்றது.
விமானம் பறக்கும் உயரம், வேகம் மற்றும் திசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விமானியும் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளும் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
பாராசூட் என்பது ஒரு வகையான காற்று எதிர்ப்பு கருவி. இது ஒரு நபரை உயரத்தில் இருந்து பாதுகாப்பாக கீழே இறக்க பயன்படுகிறது.பாராசூட் ஒரு பெரிய துணியால் ஆனது. இது காற்றில் விரிந்து நபரின் எடையைக் குறைத்து மெதுவாக கீழே இறங்க உதவும் ஒரு சாதனமாக அறியப்படுகின்றது.
விமானத்தில் ஏன் பாராசூட் கொடுப்பதில்லை?
பாராச்சூட்டுகள் பெரியதாகவும் எடையுள்ளதாகவும் இருக்கும். ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பாராசூட் வழங்கினால் விமானத்தின் மொத்த எடை அதிகரிக்கும்.
சாதாரணமான ஒரு பாராசூட்டின் எடை 10 கிலோகிராம் என்றாலும் 300 பயணிகளுக்கு 3000 கிலாகிராம் ஆகும் இதனால், விமானத்தின் எரிபொருள் நுகர்வு அதிகரித்து விமானத்தின் பறக்கும் திறனிலும் பாதிப்பு ஏற்படும். மேலும், ஒவ்வொரு பயணிக்கும் பாராசூட்டை சேமித்து வைக்க போதுமான இடம் விமானத்தில் இருக்காது.
அவசர காலத்தில் பயணிகள் தங்களுடைய பாராசூட்டை எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்த முடியுமா என்பதும், 300 பயணிகள் ஒரேடி நேரத்தில் வெளியேற்றப்பட முடியுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றது.
விமானத்தில் உள்ள அழுத்தம், குறைந்த வெப்பநிலை போன்ற காரணங்களால் பாராசூட்டை பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். விமானம் விழும்போது அதன் வேகம் மிக அதிகமாக இந்த வேகத்தில் இதிலிருந்து ஒரு பயணி தனது பாராசூட்டை திறந்து பாதுகாப்பாக கீழே இறங்க முடியாது என்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.
விமானம் பொதுவாக பூமியில் இருந்து 35000 அடி உயரத்தில் பறக்கும். அந்த உயரத்தில் பாராச்சூட் இருந்தாலும் பயணி பாதுகாப்பாக தரையில் இறங்குவார் என சொல்ல முடியாது. 35000 அடியில் இருந்து பாராச்சூட் மூலம் இறங்கினால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மயக்கம் ஏற்படும்.
விமானத்தில் உள்ள மொத்த பயணிகளும் பாரச்சூட்டை எப்படி பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். சில பயணிகள் தவறுதலாக பாராசூட்டைத் திறந்து விடலாம் அல்லது பாராசூட்டை சரியாக பயன்படுத்தத் தெரியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.
இதனால் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும். இது போன்ற அறிவியல் காரணங்களால் தான் ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு பாராசூட் கொடுப்பதில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |