முதல்வர் பதவியேற்பு விழாவில் முக அழகிரி பங்கேற்காதது ஏன்? மகள் போட்டுடைத்த உண்மை
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட போது, அவரது அண்ணன் முக அழகிரி பங்கேற்கவில்லை.
அவருக்கு பதிலாக மகன் தயாநிதி அழகிரி மற்றும் மகள் கயல்விழி அழகிரி பங்கேற்றனர், இந்நிலையில் புதிய தலைமுறைக்கு கயல்விழி அழகிரி அளித்துள்ள பேட்டியில், குடும்பம் ஒன்றிணைந்தது குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சித்தப்பாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இது, இனி தமிழக மக்களுக்கு தொடர்ச்சியாக நன்மைகள் மட்டுமே கிடைக்கும், அடுத்தமுறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.
தனது தந்தை பதவியேற்பு விழாவில் பங்கேற்காதது குறித்து பேசுயைில்,
கொரோனா சூழலால்தான் அப்பாவால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இதுத்தவிர, வேறு எந்தக் காரணமும் கிடையாது. அப்பா சித்தப்பாவுக்கு போனில் வாழ்த்து சொன்னார்.
இருவரும் சகஜமாக பேசிக்கொண்டனர். எந்த வருத்தமும் இல்லை. கொரோனா சூழலில் உடல்நிலை சரியில்லாததால் பதவியேற்பு விழாவுக்கு வர முடியவில்லை என்று கூறியதோடு ‘கண்டிப்பா சென்னை வருவேன். வந்து உன்னை பார்க்கிறேன்’ என்று சித்தப்பாவிடம் அப்பா கூறினார்.
வீட்டில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது மனசுக்கு ரொம்ப இதமாவும் நிம்மதியாவும் இருக்கு. ரெண்டு பேரும் ஒற்றுமையோடு இருந்தால் எல்லோருக்கும் நல்லதுதான் என தெரிவித்துள்ளார்.