சாணக்கிய நீதி : உங்க வாழ்க்கையில் இந்த 3 பேர் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி!
இந்திய வரலாற்றில் சிறந்த அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் சாணக்கியர், வாழ்க்கை, ஒழுக்கம், பொருளாதாரம் மற்றும் சமூக நெறிமுறைகள் குறித்த பல்வேறு கருத்துகளை தனது சாணக்கிய நீதி நூலில் பதிவு செய்துள்ளார்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வந்தாலும், சரியான மனிதர்களின் ஆதரவு இருந்தால் எந்தச் சூழலையும் வெற்றிகரமாகக் கடக்க முடியும் என்று சாணக்கியர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, எந்தக் காலத்திலும் நம்மை நம்பி, உறுதுணையாக நிற்கும் சிலரை ஒருபோதும் விலக்கிவிடக் கூடாது என சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
அத்தகையவர்கள் நம் வாழ்க்கையில் இருப்பதே ஒரு பெரிய ஆசீர்வாதம் என்றும் அவர் கூறுகிறார். அப்படிப்பட்ட முக்கியமான மூன்று பேர் யார்? அவர்கள் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியமானவர்கள்? என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

புத்திசாலி மனைவி
சாணக்கிய நீதியின் பிரகாரம் புத்திசாலித்தனமும், உணர்வுப்பூர்வமான புரிதலும் கொண்ட மனைவி ஒருவருக்கு கிடைப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டமாம்.
வாழ்க்கையில் சவாலான சூழல்கள் ஏற்படும் போது, அத்தகைய மனைவிகள் தங்கள் கணவருக்கு உறுதியான ஆதரவாக இருந்து, அவர்களுக்கு துணை நிற்பார்கள்.
கணவர் எதிர்கொள்ளும் கடினமான தருணங்களை தைரியத்துடன் சமாளிக்கவும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனவலிமையை அளிக்கவும் அவர்கள் உதவியாக இருப்பார்கள். குறிப்பாக நெருக்கடியான காலங்களில், அவர்கள் குடும்பத்தின் பாதுகாப்பு அரணாக செயல்படுவார்கள்.
அறிவும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனும் கொண்ட மனைவி அமைவது ஒரு ஆணின் பெரும் பாக்கியம் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பொறுப்பான மகன்
சாணக்கிய நீதியின் பிரகாரம் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு ஆதரவாகவும் புரிந்துணர்வுடனும் இருப்பது பெரும் அதிர்ஷ்டம் என்கின்றார்.
தங்கள் பிள்ளைகள் நல்ல குணங்களுடன், நற்பண்புகளுடன் வளர வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் மிகப்பெரிய விருப்பமாகும்.ஒரு மகன் சமூகத்தில் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, நல்ல குணங்களும் பொறுப்புணர்வும் கொண்ட மகனைப் பெற்ற பெற்றோர் வாழ்க்கையில் பெரும் கவலைகளை சந்திக்க வேண்டியதில்லை. எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் அத்தகைய மகன் தனது பெற்றோரை ஒருபோதும் கைவிடமாட்டான் என்றும் அவர் கூறுகிறார்.

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?
உண்மையான நண்பர்கள்
ஒருவரின் வாழ்க்கையில் உருவாகும் நட்பும் உறவுகளும் அவரது வாழ்க்கைப் பயணத்தையும், சமூகத்தில் அவருடைய நிலைப்பாட்டையும் தீர்மானிக்கின்றன. நல்ல நண்பர்கள் கிடைத்தால், ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
உண்மையான நண்பர்கள் ஒருபோதும் நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள். அவர்கள் எந்தவித சுயநலமும் இல்லாமல், நமது நலனையும் வளர்ச்சியையும் மட்டுமே விரும்புவார்கள்.
அத்தகைய நல்ல நண்பர்களின் நட்பை ஒருபோதும் இழக்கக் கூடாது. ஆபத்தான மற்றும் சவாலான காலங்களில் உண்மையான நண்பர்களே நமக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |