அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகம்... டிவியை பார்த்து உயிரை விட்ட தொண்டர்! சோகத்தில் ஓபிஎஸ் பதிவு;
அதிமுகாவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தி வருகிறது. கடந்த நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அரங்கத்திற்கு வந்த போது அவருக்கு எதிராக முழக்கங்களை விட்டு, கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என இபிஎஸ் தரப்பு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்ட ஓபிஎஸ்-யை திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பல சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகச் செயல்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதிமுக தொண்டன் ஒருவர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிக்கம்பட்டு ஊராட்சி, புதுபிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த கழக மேலவை பிரதிநிதியும், எனது சோதனை காலங்களில் உடனிருந்தவரும், என்னுடைய தீவிர ஆதரவாளருமான அன்புச் சகோதரர் திரு.வி.பாலகிருஷ்ணன் அவர்கள்,
நேற்று முன்தினம் (23.6.2022) அஇஅதிமு கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகச் செயல்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மேலும், உயிரிழந்த திரு.வி.பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என ஓபிஎஸ் பதிவிட்டுள்ளார்.
நேற்று (23.6.2022) அஇஅதிமு கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகச் செயல்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 24, 2022