உணவுக்குப் பின் எரிச்சலா? உடலை காக்க இந்த ஒரு ஜூஸ் போதுமாம்
வெள்ளை பூசணி ஜுஸ் குடிப்பதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும் எரிச்சலை சரிசெய்யவும், உடம்பில் ஏற்படும் பல சிக்கல்களை சமாளிக்கவும் வெள்ளை பூசணி உதவுகின்றது.
வெள்ளை பூசணி ஜுஸின் நன்மைகள்
அதிக நார்ச்சத்து கொண்ட இந்த ஜுஸானது உடம்பில் இருக்கும் கலோரிகளைக் குறைத்து எடை இழக்க உதவுவதுடன், பசியையும் அடக்குகின்றது.
நார்ச்சத்து நிறைந்த இந்த சாற்றில் குடல் இயக்கத்தை சீராக்குவதுடன், மலச்சிக்கல், வாயு, வீக்கம், அமிலத்தன்மை பிரச்சனையிலிருந்து பாதுகாக்கின்றது.
இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் சிறுநீரக கற்கள் பிரச்சனையை வராமல் தடுக்கின்றது. மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தின் நலனை மேம்படுத்தவும் செய்கின்றது.
முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனையைக் குறைத்து, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.
வெறும்வயிற்றில் காலை சாப்பாட்டுக்கு முன்பு இதனைக் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. பல நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.
துத்தநாகம், பாஸ்பரஸ், தியாமின், ரைபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்து உடல் சோர்வை நீக்கி ஆற்றலை அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |