தங்க கோபுரத்தில் வெள்ளை ஆந்தை.. காசி விஸ்வநாதர் கோயிலில் நடந்த அதிசயம்
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் தங்க கோபுரத்தில் இரவு வேளையில் வெள்ளை நிற ஆந்தையொன்று அமர்ந்திருந்த காணொளியை இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
"ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்" காசி விஸ்வநாதரை வழிபாட்டிற்கு பெயர் பெற்ற கோயிலாகும். இந்த கோயில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப் புனிதமான இந்து கோயில்களில் இதுவும் ஒன்று. இதுபோன்று தமிழ்நாட்டில் தென்காசி மற்றும் சென்னையின் மேற்கு மாம்பலம் ஆகிய ஊர்களிலும் காசி விஸ்வநாதர் கோயில்கள் உள்ளன.
வந்தது வெள்ளை ஆந்தையா?
இந்த நிலையில், ஆன்மீகம் மற்றும் பக்தி நகரமான வாரணாசியில் பக்தர்கள் பார்த்து வியந்து போகும் அளவுக்கும் சம்பவமொன்று நடந்துள்ளது.
அதாவது வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் தங்க கோபுரத்தில் இரவு 10 மணியளவில் வெள்ளை நிற ஆந்தையொன்று வந்து அமர்ந்திருந்துள்ளது. இந்த காட்சியை அந்த சமயத்தில் கோயிலில் இருந்து பக்தர்கள் பார்த்து காணொளி எடுத்துள்ளனர்.
அத்துடன் அங்கிருந்தவர்கள், வெள்ளை நிற ஆந்தை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் தங்க கோபுரத்தில் இரவு வேளையில் அமர்ந்துள்ளது. அதன் பின்னர் மறுநாள் காலை அவ்விடத்தில் இருந்து காணாமல் போனதாகவும் கூறுகிறார்கள்.
ஸ்ரீ காசி விஸ்வநாத் கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி வெள்ளை ஆந்தை வந்த காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, மங்களத்தின் அடையாளமாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
On Monday ( 18. 08.2025 ) night, around 10 PM, a rare white owl appeared out of nowhere and sat gracefully on the golden Gopuram of the Kashi Vishwanath temple.
— 𝗔𝗵𝗮𝗺 𝗕𝗿𝗮𝗵𝗺𝗮𝘀𝗺𝗶 (@TheRudra1008) August 21, 2025
A white owl is considered auspicious due to its association with good luck, wealth, and wisdom, particularly in… pic.twitter.com/u8IW24AriX
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இந்த காட்சியை பார்த்த பக்தர்கள் அங்கு வந்தது கடவுளின் அவதாரம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |