மே 17முதல் சனிபிடியில் இருந்து விடுதலை எந்த ராசிகளுக்கு?
மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால், 12 ராசிகளிலும் தாக்கம் ஏற்படும்.

சனி பகவான்
சனி பகவான், நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகின்றார். எல்லோரும் சனிபகவானை கணடால் அச்சப்படுவார்குள். ஆனால் அது தவறு சனியால் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என பழமொழியே உள்ளது.
நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு பலனை அள்ளி தருபவர் அவர். இதனால் இவரை ஜோதிடத்தில் தீதிக்டவுள் என அழைக்கப்படுகின்றார்.

கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியைக் கடக்க அவர் சுமார் 2 1/2 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.
இதனால்தான் ஒருவரது வாழ்க்கையில் சனியின் தாக்கம் (ஏழரை சனி, அஷ்டம சனி) நீண்ட காலம் நீடிக்கிறது. இதன் மூலம் மக்கள் பல பாடங்களை கற்றுக்கொள்கின்றனர்.
தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், வரும் மே 17-ம் தேதி முதல் புதனின் ஆதிக்கமுள்ள ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
வரும் அக்டோபர் 9-ம் தேதி வரை அவர் அதே நட்சத்திரத்தில் நீடிப்பார். இந்த நட்சத்திர மாற்றத்தால் 12 ராசிகளிலும் தாக்கம் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ராசிகள் பலத்த பலனை பெறுவார்கள்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணம் உங்களிடம் வந்து சேரும். பல வருமானத்திற்கான வழிகள் அதிகமாகும். நீண்ட நாள் ஆசைகள் மற்றும் இலக்குகள் நிறைவேறும். அரசு சார்ந்த விடயங்களில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லத் திட்டமிடுபவர்களுக்கு ஆசை நிறைவேறும். மன அழுத்தம் வர வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது அவசியம்.
மிதுனம்
- தொழில் புரட்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல துறைகளில் இருந்து நன்மைகள் வந்து குவியும். வேலையில் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படுவதோடு, மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் வரலாம். துணையுடன் அமைதியாகப் பேசி பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி
- திட்டங்கள் வெற்றி பெறும் கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி நிலையை வலு பெறும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். நிதி நிலை முன்பை விட பல மடங்கு வலுவடையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).