இந்த ராசியினரை நம்பி மலையையும் இழுக்கலாமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் ஒருபோதும் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள்.
அடிப்படி இவர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நம்பிகைக்குரிய ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் 12 ராசியிலும் மிகவும் நம்பகமானவர்கள். நீங்கள் அவர்களிடம் ஒரு ரகசியத்தை வைத்திருக்கச் சொன்னால், அவர்கள் அதை உயிரே போனாலும் வெளியில் செல்ல மாட்டார்கள்.
இவர்கள் ஒரு திட்டத்தில், ஒரு வாக்குறுதியுடன், ஒரு கூட்டாளியாக வார்த்தையையும் உறுதிப்பாட்டையும் கொடுத்திருந்தால், அதை அவர்கள் எப்படியாவது காப்பாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் வார்த்தையை நம்பி எந்த எல்லைக்கும் போகலாம். இவர்கள் யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை துரோகியாக மட்டும் இருக்கவே மாட்டார்கள்.
அவர்கள் "சரியானதை" செய்து முன்மாதிரியாக இருப்பதால் மிகவும் நம்பகமான நபர்களாக அறியப்படுகின்றார்கள். வார்த்தையைக் கடைப்பிப்பது அவர்களின் முக்கிய கொள்கையாக இருக்கும்.
கடகம்
மிகவும் நம்பகமான ராசிகளின் பட்டியலில் கடகம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கின்றது. இந்த ராசியில் பிறந்தவர்கள் நண்பர்களுக்கும் சரி உறவுகளுக்கும் சரி விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களால் முடிந்தவரை நெறிமுறையாகவும் நேர்மையாகவும் தங்கள் வாழ்க்கையை வாழ முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் இதன் பொருள் என்னவென்றால், இவர்கள் நேசிக்கும்போது, முழுமையாக நேசிக்கிறார்கள், இவர்களின் வார்த்தையில் சத்தியம் இருக்கும்.
இவர்கள் கொடுத்த வாங்கை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் ஆற்றல் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்களை நம்பி மலையை வேண்டுமானாலும் கட்டி இழுக்கலாம். வாக்குருதி கொடுத்து விட்டால் இறுதிவரை கூட இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கிசுகிசுப்பவர்களாகவும், மக்களை நேசிப்பவர்களாகவும், கவனத்தைத் தேடுபவர்களாகவும், முடிவெடுக்க முடியாத காதலர்களாகவும் தோன்றலாம், ஆனால் அவர்கள் மிகவும் நம்பகமானவர்களாக இருப்பார்கள்.
அன்பின் கிரகத்தால் ஆளப்படுவதால், அன்பு செலுத்துவது வெறும் வாய்வார்த்தையை விட ஆத்ம ரீதியான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எதையாவது நம்பும்போது, அவர்கள் உறுதியானவர்களாகவும் உந்துதலாகவும் மாறுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் ஆர்வத்தாலும், அன்பு செலுத்தும் நம்பமுடியாத திறனாலும் தூண்டப்படுகிறார்கள். இவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைக்கு துரோகியாக மாறுவது ஒருபோதும் நடக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |