மற்றவர்களை பேசியே மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமதனது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
பொதுவாகவே மனிதர்களுக்கு பேச்சாற்றல் மிகவும் முக்கியதும் வாய்ந்த திறமையாக பார்க்கப்படுகின்றது. சிலர் பேச்சினால் எதையும் சாதிக்கும் அளவுக்கு திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை பேச்சாலேயே மயக்கிவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் வசீகரமான தோற்றம் மற்றும் பார்வையுடன் மற்றவர்களை ஈர்க்கும் அளவுக்கு சிறந்த பேச்சாற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் ரகசிய குணம்தான், அவர்களின் திறமையும், சுவாரஸ்யமான பேச்சும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
தோற்றம், புத்திசாலித்தனம், சிந்தனைக என அனைத்தும் நிறைந்த புத்தகமாய் இவர்கள் இருப்பார்கள். உண்மையிலேயே இவர்கள் ஒரு காந்தம் போல் தோற்றமளிப்பார்கள்.
ரிஷபம்
உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகலும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர், இயல்பாகவே மற்றவர்களை ஈர்கும் அளவுக்கு அழகிய தோற்றம் கொண்டவர்களளாக இருப்பார்கள்.
விசேஷங்களிலோ அல்லது பார்ட்டிகளிலோ குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும் உங்களை அதிகம் ஈர்க்கிறாரக்ள் என்றால் அது நிச்சயம் ரிஷப ராசிக்காரர்களாகத்தான் இருக்கும்.
இதுதான் அவர்களின் பலமே. அவர்களின் இருக்கும் இடத்தில் பேசாமல் இருந்தால் கூட அவர்களின் ஆளுமை சிறப்பாக பேசும்.
மற்றவர்களின் கவனம் அதுவாகவே அவர்களை தேடி வரும், இவர்களை தவிர்ப்பது என்பது முடியாத ஒன்று. பேசாமலேயே உங்களின் கவனத்தை ஈர்க்கும் திறமை இவர்களிடம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை போல வேறு யாராலும் மற்றவர்களை பேச்சால் சாய்த்துவிட முடியாது. இவர்கள் மற்றவர்களை பேச்சாற்றலால் ஈர்க்கும் காந்தமாகவே இருப்பார்கள்.
இவர்களின் புத்திசாலித்தனமும், வித்தியாசமான படைப்பாற்றலும் இவர்களை எவரையும் நண்பர்களாக மாற்ற உதவும். நீங்கள் கும்ப ராசிக்காரர்களை புரிந்து கொள்ள நினைத்தால் அது உங்களால் முடியாத காரியமாகும், இவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.
இவர்கள் ஒரு கருத்தை பேசும்போது நமது கவனம் வேறு எங்கும் சிதறாது. பெரும்பாலும் இவர்களின் சிறப்பும் இவர்களின் ஆளுமை நிறைந்த பேச்சாகத்ததான் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |