எப்போதுமே கவலையில் இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?
வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிரை்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் என்பது மாறி மாறி வருவது இயல்பான விடயம் தான். ஆனால் அனைவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையையே விரும்புகின்றோம்.

ஆனால் ஜோதிடத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே எப்போதும் கவலையான விடயங்களை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்களாம்.
அப்படி வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு விடயத்துக்கு கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

சுக்கிரகின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசியினர் இயல்பாகவே காதல் விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் இவர்களின் கவலைக்கு முக்கிய காரணமாக இருக்கும். மற்றவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை காட்டு இவர்களுக்கு, அது போல் தூய்மையான அன்பு கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் அதிக மனஅழுத்தம் கொண்ட ராசியாகவும் அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் மற்றவர்களின் ஆசைகளையும், தேவைகளையும் சொல்லாமலேயே புரிந்து நடப்பார்கள் ஆனால் இவர்களின் உணர்வுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதால், வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் கவலையாகவே இருப்பார்கள்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இயல்பாகவே மற்றவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களால் ஒரு விடயத்தை அடக்கியாள முடியாத பட்சத்தில் அதிகமான மனசோர்வுக்கும், கவலைக்கும் ஆளாகின்றார்கள். அவர்களின் முடிவெடுக்காத தன்மை அவர்களின் உணர்ச்சிகளையும் பாதிக்கிறது, இது அவர்கள் உண்மையில் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பற்றி குழப்பமடைய வழிவகுக்கும்.
அவர்களின் வாழ்க்கை சிறிய அளவில் சிக்கலில் இருந்தாலும் கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் இரட்டிப்பாக பைத்தியமாகிறார்கள். அதனால் இந்த உணர்திறன் மிக்க ஆன்மாக்களுக்கு மனச்சோர்வையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.
மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு பெரும்பாலும் தங்களின் குடும்பம் தான் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. இவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது இவர்களுக்கு துளியும் பிடிக்காது. ஆனால் அப்படி நடக்கும் போது இவர்கள் அதிகமாக கவலையடைகின்றார்கள்.
இவர்கள் மிகவும் உணர்திறன் மிக்கவர்களாக இருப்பதால், வாழ்க்கையில் அதிகமான நேரங்களில் எளிதில் கவலைப்படுகின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |