குழந்தை போல் தூய்மையான ஆன்மாவை கொண்ட 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும், அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள், காதல் வாழ்க்கை உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மனதளவில் குழந்தை போல் தூய்மையான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இவர்களின் நடத்தையிலும் அவர்களின் குழந்தைத்தனம் பிரதிபலிக்கும். அப்படி குழந்தை போல் நடந்துக்கொள்ளும் உன்னத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசயில் பிறந்தவர்கள் மற்ற ராசியனருடன் ஒப்பிடுகையலில் மிகவும் குழந்தைத்தனமான ஆன்மாவைக் கொண்டிருப்பார்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் எந்தவொரு விடயத்தையும் ஒரு புதிய கோணத்தில் இருந்து பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கடினமாக சூழ்நிலைகளையும் தங்களின் குறும்புத்தனமான குணத்தால் எளிதில் கடந்துவிடுவார்கள். இவர்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும்.
எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்வதால், மற்றவர்களின் விமர்சனங்கள் இவர்களை மனதளவில் பாதிப்பது கிடையாது.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ஆடம்பரம் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்கள் இயல்பாகவே தங்களை மகிழ்சியாக வைத்திருக்கும் விடயங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் பூமியுடன் ஒரு சிறப்பு தொடர்பைக் கொண்டுள்ளனர், மணலில் விளையாடும் ஒரு குழந்தை மரங்களுடன் வேடிக்கைக்காகப் பேசுவது போல. அவர்கள் அன்பானவர்களாக இருப்பார்கள். பிடித்தவர்களிடம் அதிகமாக குறும்பு செய்வார்கள்.
ரிஷப ராசிக்காரர்களின் குழந்தைத்தனமான இயல்பின் தீமை என்றால் அது அவர்களின் பிடிவாதம் தான். இருப்பினும் இவர்களின் குழந்தைத்தனமான பிடிவாதம் அவர்களின் வெற்றிக்கும் முக்கிய காரணியாக அமையும்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் சமூகத்தன்மை கொண்டவர்களாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டவர்களாகவும் தர்க்கரீதியானவர்களாகவும் இருந்மதாலும் ஒரு குழந்தைத்தனமும் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
ஒரு குழந்தை முதல் முறையாக ஒரு விடயத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியடைவது போல் இவர்கள் ஒரு புதிய இடத்துக்கு செல்லும் போதோ அல்லது விரும்பிய உணவை உண்ணும் போதோ குழந்தையாகவே மாறிவிடுவார்கள்.
இவர்கள் வயது அடிப்படையில் எவ்வளலு பெரியவர்களாக இருந்தாலும் மனதளவில் எப்போதும் குழந்தைகளாகவே இருப்பார்கள். அவர்களின் செயல்களிலும் ஒரு குறும்புத்தனம் இருந்துக்கொண்டே இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |