உடலின் எந்த உறுப்பு எந்த நேரத்தில் செயல்படும்? மருத்துவரின் குறிப்பு
Liver
By Pavi
உடலின் ஒவ்வொரு பாகங்களும் அதன் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமாகும். ஒரு நாளில் 24 மணி நேரம் இருக்கின்றது. இந்த 24 மணி நேரத்தில் நாம் சாப்பிடுவது தூங்குவது விளையாடுவது போல இன்னும் பல விடயங்களை செய்கிறோம்.
இதை நாம் செய்யும் போது நமது உடலும் அதன் வேலையை சரியாக செய்ய ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு நேரம் தேவைப்படுகின்றது.
அப்படி ஒவ்வொரு பாகங்களும் என்ன நேரத்தை எடுத்துக்கொள்கின்றது என்பதை பார்த்து அதற்கேற்ற முறையில் நமது உடலை நாம் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். இதை டாக்டர் நர்மதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக தெளிவாக கூறியுள்ளார்.
அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை | இது நுரையீரலுக்கான நேரம். இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். |
அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை | இது பெருங்குடலுக்கான நேரம். இந்த நேரத்தில் மலம் கழிக்க வேண்டும். |
காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை | இது இரைப்பையின் நேரம். இந்த நேரத்தில் காலை உணவை எடுக்க வேண்டும். |
காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை | இது மண்ணீரலின் நேரம். இந்த நேரத்தில் தினசரி வேலைகளை செய்ய தொடங்கலாம். |
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை | இது இதயத்துக்கான நேரம். இந்த நேரத்தில் மதிய உணவை சாப்பிட வேண்டும். |
மதியம் 1 மணி முதல் 3 மணி வரை | இது சிறுகுடலின் நேரம். இந்த நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் போடலாம். |
மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை | இது சிறுநீர்ப்பையின் நேரம். இந்த நேரத்தில் படிக்கலாம். |
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை | இது சிறுநீரகங்களின் நேரம். இந்த நேரத்தில் இரவு உணவை முடித்து விட வேண்டும். |
இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை | இது பெரிகார்டியத்தின் நேரம். இந்த நேரத்தில் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடலாம் அல்லது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் விஷயங்களில் ஈடுபடலாம். |
இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை | இது டிரிபிள் பர்னர் நேரமாகும். அதாவது இது உறுப்பு அமைப்பு முழுவதுமாகக் குறிக்கிறது. மேலும் இந்தக் காலகட்டம் அதிக அளவு வெப்பத்தை உருவாக்கும் காலமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தூங்க சென்று விட வேண்டும். |
இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை | இது பித்தப்பைக்கான நேரம். இந்த நேரத்தில் கட்டாயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் செல்லுலார் பழுதுபார்க்கும் செயல்முறை நடக்கும். |
நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை | இது கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலத்தில் உடல் தன்னைத் தானே சுத்தம் செய்யும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US