இந்த மாதம் பிறந்தவங்க கடின உழைப்பால் உச்சத்திற்கு வருவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா?
கிரகங்கள் நகர்வுகள் மட்டுமில்லாமல் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம், மாதம் உள்ளிட்ட அனைத்தும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் தான் விரும்பியபடி வாழ வேண்டுமென்ற எண்ணம் கட்டாயம் இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கையில் வாழ்பவர்களுக்கு அதனை தக்க வைத்து கொள்ள வேண்டும் ஆசை இருக்கும். அதே சமயம் ஏழையாக பிறந்தவர்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசை ஆசை இருக்கும்.
இப்படி மனிதர்களின் ஆசைகள் அவர்களின் முயற்சிகளுக்கமைய நிறைவேறுகிறது. ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, ஒருவருக்கு அதிர்ஷ்டம் கிரக மாற்றங்களின் மூலமும் கிடைக்கும்.
அந்த வகையில் குறிப்பிட்டு சில மாதங்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டத்தோடு பிறந்திருப்பார்களாம். அப்படியாயின், எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்துடன் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பிப்ரவரி | பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் இயற்கையாகவே நிலைத்தன்மை மற்றும் ஆடம்பரத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். இதனால் கடின உழைப்பு மற்றும் மன வலிமையினால் அந்த செல்வத்தை தேடிக் கொள்வார்கள். |
மே | மே மாதம் பிறந்தவர்கள் செல்வந்தர் மற்றும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒழுக்கம் கொண்டவர்களாகவும், வாழ்க்கையில் பெரிய விஷயங்களை முனைப்புடன் செய்வார்கள். இவர்களின் விடா முயற்சி அவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்லும். எப்போதும் உழைப்பதற்கு ஆர்வமாக இருப்பதே இவர்களின் பலமாகும். |
நவம்பர் | நவம்பர் மாதம் பிறந்தவர்கள் புதுமை மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்களாக விளங்குவார்கள். வெற்றியின் வழியை கண்டுபிடித்து அதன் மூலம் பயணிப்பார்கள். நிதி மற்றும் இலக்குகளில் அதிகம் கவனம் கொள்வார்கள். எந்த நிலைமையிலும் மற்றவர்களை தள்ளி விட வேண்டும் என நினைக்கமாட்டார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).