இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தா வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதிநிலை, காதல், திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே அதிக சுயநல குணம் கொண்டவர்களாக இருப்பதால், திருமணத்தின் பின்னர் சுயநலமான கணவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

இவர்கள் தங்களின் மனைவியின் ஆசைகளையும் விருப்பங்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, தங்களை பற்றி மாத்திரமே சிந்திப்பார்களார்கள். அப்படி சுயநலத்தின் மறு உருவமாகவே திகழும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பிலேயே உணர்வுகளை விடவும் யதார்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காதலை விடவும், தங்களின் இலக்குகள் மீது அதிக அக்கறையும், கவனடும் கொண்டவர்களாக இருப்பதால், திருமணத்தின் பின்னர் இந்த ராசி ஆண்கள் மிகவும் சுயநலம் கொண்டவர்களாக மாறிவடுவார்கள்.
இவர்களின் பிடிவாத குணம் மனைவின் ஆசைகள் பற்றி சிந்திக்கவே விடாது தங்களின் தேவைக்காக மட்டும் தான் மனைவி என்ற கருத்து இவர்களிடம் வலுவாக இருக்கும்.
யாருக்காகவும் மங்களின் சுதந்திரத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள். தங்கள் துணை என்ன விரும்புகிறார் என்பதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள்,
ரிஷபம்

ரிஷப ராசி ஆண்கள் காதல் விடயத்தில் அதிக நேர்மையான குணம் கொண்டவர்களாகவும், உண்மையான அன்பை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் தங்களின் மனைவி தங்களின் கட்டளைகளுக்கு பணிந்து நடக்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மனைவியை ராணி போல் பார்த்துக்கொள்வார்கள்.
ஆனால் மனைவி தங்களுக்கு உண்மையாக இல்லாத போது, இந்த ராசி ஆண்கள் முற்றும் முழுதாக சுயநல குணம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள்.
தங்களின் தொழில் வாழ்க்கையின் வெற்றிக்கு முன்னால் தங்கள் துணையை அவர்கள் ஒரு இரண்டாவதாக தான் வைக்கின்றார்கள். ஆனால் இவர்களின் காதல் விசுவாசமானதாக இருக்கும்.
சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாகவும், சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் மனைவின் மொத்த கவனமும் தங்களின் மீது தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். தங்கள் துணை அவ்வாறு இல்லாத போது இவர்கள் தங்ளின் சுயநல முகத்தை வெளிக்காட்ட ஆரம்பிக்கின்றார்கள்.
இவர்கள் எவ்வளவு நேசிக்கப்படுகிறார்கள் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். இவர்கள் மனைவியை இவர்கள் நேசிக்கின்றார்களா என்று சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |