பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? வாஸ்துபடி வீட்டு வாசலில் இதை வைத்து பாருங்க!
பொதுவாவே வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவதன் பிரகாரம் நாம் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அதாவது நாம் அலங்காரத்துக்காக வைத்திருக்கும் பொருள்கள் கூட வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

சில பொருட்கள் வீட்டின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசமாக்குவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வீட்டில் அடிக்கடி சிரமங்கள் ஏற்பட்டாலும் பண நஷ்டம் ஏற்பட்டாலும் வாஸ்து விதிகளில் குறைப்பாடு இருப்பதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.

வாஸ்து சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன, அதன் உதவியுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செல்வ செழிப்பையும் கொண்டுவர முடியும்.
அந்தவகையில், வீட்டு வாசலில் சரியாக நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சில பொருட்களை வைத்தால் பணத்திற்க பஞ்சமே வராது என்பது ஐதீகம். அப்படிப்பட்ட சில அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மாவிலை தோரணம்

வாஸ்து சாஸ்த்திரத்தின் அடிப்படையில், வீட்டின் பிரதான நுழைவாயிலில் மாவிலை தோரணத்தை தொங்கவிடுவது வீட்டுக்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன் தீய சக்திகளை நுழைய விடாமல் தடுப்பதாகவும் நம்பப்படுகின்றது. மேலும் இது வீட்டின் வாசலுக்கு ஒரு மங்களகரமான தோற்றத்தையும் கொடுக்கின்றது. இவ்வாறு செய்வதால், வீட்டில் பணத்தின் கடவுளாக அறியப்படும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
லட்சுமி தேவியின் பாதச்சுவடுகள்

வீட்டின் வாசலில் லட்சுமி தேவியின் பாதச்சுவடுகளை வைப்பது வாஸ்து பிரகாரம் மிகவும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது. லட்சுமியின் பாதங்களானது வீட்டை நோக்கியதாக இருக்க வேண்டும். இவ்வாறு வைப்பதும் வீட்டில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. பொருளாதாரத்தில் ஏற்றம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.
ஸ்வஸ்திக் சின்னம்

வீட்டு வாசலில் அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் ஈர்ப்பதற்கு ஸ்வஸ்திக் சின்னம் வைப்பது சிறந்தது. அது வினை தீர்கும் கடவுளான விநாயகரின் அடையாளமாகும். இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டு பிரதான வாசல் கதவின் மையத்தில் வைக்கும் போது, அது வீட்டில் அமைதியையும் பணப்புலக்கத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் கோவிலுக்குள் இருக்கும் அதே மன நிறைவை கொடுக்கும்.
செம்பு சூரியன்

வீட்டின் பிரதான வாசலில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் செம்பு சூரியனை வைப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. சூரிய பகவான் தலைமை, மரியாதை மற்றும் பிரகாசத்தின் சின்னமாக அறியப்படுகின்றார். இதை வீட்டு வாசலில் வைப்பதால், வீட்டில் உள்ளோர் வாழ்வில் சிறப்பான பலன்களையும், பொருளாதார விருத்தியையும் எளிதில் அடைய முடியும்.
மர பெயர்ப்பலகை

பொதுவாகவே வீட்டிற்கு ஒரு பெயர் பலகையை வைப்பது வழக்கம். அப்படி வைக்கும் பெயர் பலகை வாஸ்துப்படி மரத்தாலானதாக இருந்தால் இன்னும் சிறப்பு, இது வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதுடன், செல்வ செழிப்கை கொடுக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்த பொருட்களில் ஏதாவது ஒன்றை வீட்டு வாசலில் வைப்பது பொருளாதார ரீதியில் உச்சம் கொடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |