பிரயாணி விலையில் எடை குறைப்பு ஊசிகளா? அபாயம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை!
பொதுவாகவே தற்காலத்தில் ஆண்களும் சரி, பெண்களும் சரி உடல் எடையை குறைத்து கட்டு மஸ்தான உடலமைப்பை பெற வேண்டும் என்பதில் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றனர்.
அதிகரித்த உடல் பருமன் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துவரும் நிலையில், எடையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று தான்.

ஆனால் எடை குறைப்பானது ஆரோக்கியமான முறையில் நடைப்பெறுகின்றதா? அல்லது பக்கவிளைவுகளையும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் மோசமான முறையில் நிகழ்கின்றதா என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
தற்காலத்தில் மௌஞ்சாரோ, வெகோவி, மௌன்ஜாரோ போன்ற உடற் எடை குறைக்கும் ஊசி மூலம் எடை குறைப்பவர்கள், டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் எடை குறைப்பவர்களை காட்டிலும் நான்கு மடங்காக அதிகரிக்கிறது வருவதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.

எடை குறைப்பு ஊசி பயன் தருமா?
இந்நிலையில், உடல் எடையை விரைவில் குறைக்க இந்த எடை குறைப்பு ஊசிகளை பயன்படுத்துவது பயன் தருமா? எவ்வாறான பக்க விளைவுளை ஏற்படுத்தும், யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் மருத்துவர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

குறித்த பதிவில் அவர் குறிப்பிடுகையில், இதுபோன்ற உடல் எடையை குறைக்க உதவும் ஊசிகளை உடற்பருமனால் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்வோருக்கு மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த ஊசியோடு சேர்த்து அவர்களுக்கு வாழ்வியல் மாற்றங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆனால் சாதாரணமாக சில எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.அதனால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதுடள் ஊசியை நிறுத்தினால் மீண்டும் உடல் பழைய நிலைக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. அதாவது மீண்டும் உடல் பருமன் அதிகரிக்கும் என்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |