விருந்தில் அப்பளம் இல்லை! நொடியில் களேபரமான கல்யாண வீடு - சிதறி ஓடிய உறவினர்கள்
கேரளாவில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்க வில்லை என்று பெரிய மோதல் இடம்பெற்றுள்ளது.
மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது.
இதில் மாப்பிள்ளையின் நெருங்கிய தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்து மண்டபத்தில் விருந்து தொடங்கியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை.
களேபரமான கலியாண வீடு
இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாப்பிள்ளையின் தோழர்களுக்கே அப்பளம் இல்லையா? என்று மாப்பிள்ளையின் உறவினர்களும் அங்கே திரள, விருந்து நடந்த மண்டபம் களேபரமானது.
அப்போது மாப்பிள்ளை தோழர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டாரும், மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர்.
இதில் பிரச்சினை பெரிதாக அங்க கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மாறிமாறி இரு தரப்பினரும் மோதி கொள்ள மண்டப ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனை கண்டு மண்டபத்தில் இருந்த உறவினர்கள் சிதறி ஓடினர். தகவல் அறிந்து அப்பகுதி போலீசார் மண்டபத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தை திருமணத்திற்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலாகி வருகின்றது.
திருமண விருந்தில் மாப்பிள்ளை தோழர்களுக்கு அப்பளம் கொடுக்காததால் இப்படி ஒரு மோதல் ஏற்பட்டு திருமண வீடே கொதித்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.