அட கல்யாண வீடுன்னா இப்படி தான் இருக்கணும்.. மாப்பிள்ளையை அலற விட்ட வீடியோ!
இன்றைய திருமண நிகழ்ச்சிகளில் நடக்கும் கூத்துகளும், அசாம்பாவிதகளும் அன்றாடம் ஏதாவது ஒரு மூலையில் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அவை இணையத்தள வழியாகவும் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது வைரலாகும் வீடியோ ஒன்று, திருமணம் என்றால் இப்படி ஒரு நகைச்சுவையாக இருக்கவேண்டும், எனப் பலரையும் நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்துள்ளது.
அந்த வீடியோவில் கல்யாண மாப்பிள்ளையின் கண்ணைத் துணியால் கட்டி வைத்துள்ளார்கள். அதன் பின்னர் ஒவ்வொருவராக வந்து மாப்பிள்ளையின் கையை பிடித்துப் பார்க்கிறார்கள்.
அப்போது மாப்பிள்ளை அது கல்யாண பெண்ணா என்பதைச் சரியாகக் கூறவேண்டும். இவ்வாறு பலரும் வந்து மாப்பிள்ளையின் கையை பிடித்துப் பார்த்த நிலையில், இறுதியாகக் கல்யாண பெண்ணே வந்து மணமகனின் கையை பிடித்த நிலையில், ஒரு வழியாகக் கல்யாண மாப்பிள்ளையும் சரியான பதிலைக் கூறி விட்டார்.
ஒரு 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் திருமணம் என்றாலே ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்யாண வீடு களைக் கட்டும். சொந்தக்காரர்கள், நண்பர்கள் எனப் பலரும் வீட்டில் குவிந்திருப்பார்கள்.
ஆனால, தற்போதைய இயந்திர வாழ்க்கையில் அதற்கெல்லாம் சாத்தியமில்லாமல் போனது. இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது எங்களது சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் வருகிறது எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
Best one ?? pic.twitter.com/awhyi0CXFh
— ᥬ?᭄சிவசங்கரி ᥬ?᭄ (@sankariramjai) June 22, 2021