மருமகளுடன் போர்வைக்குள் வைப் செய்த பிரியங்கா.. வசியும் இருக்கிறாரா?
மருமகளுடன் போர்வை போத்திக் கொண்டு வைப் செய்த பிரியங்கா காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
இதுவும் டான்ஸா?
இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தற்போதும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய காதல் கணவர் வசியுடன் லண்டனில் இருந்து தல தீபாவளி கொண்டாட்டத்திற்காக பிரியங்கா அவருடைய அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த வேலையில் தன்னுடைய தம்பி மகளுடன் போர்வையை போட்டுக் கொண்டு வைப் செய்த காணொளியை பகிர்ந்துள்ளார்.
அதில், ஒன்று பிரியங்காவும், மற்றொருவர் அவருடைய கணவர் வசி போன்று தான் தெரிகிறது. நடுவில் இருப்பது பிரியங்காவின் குட்டி மருமகள்.
இந்த காணொளியை பார்த்த பலரும், “ பிரியங்காவை போன்று அவரும் வாலு தான்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW