வீல் சேரில் வந்த பிரியங்காவை கணவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க.. வைரலாகும் video
தொகுப்பாளினி பிரியங்கா நடக்க முடியாமல் வீல் சேரில் விமான நிலையத்தில் வரும் காட்சியை அவருடைய கணவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
பிரியங்கா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
வீல் சேரில் வரும் பிரியங்காவிற்கு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்
இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தற்போதும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அவருடன் இருந்து அவருடைய கணவரும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், நடக்க முடியாமல் இருக்கும் பிரியங்கா வீல் சேரில் கணவரை பார்க்க சென்ற காட்சியை விமான நிலையத்தில் இருந்து எடுத்து, வசி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த காணொளியை பகிர்ந்து “வந்துட்டாப்புல வந்துட்டாப்புல..” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளியை பார்த்த பலரும் “பிரியங்காவுக்கு என்னாச்சு..” என நலம் விசாரித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW