பிரியங்கா வீட்டில் விஷேசம்.. திருமணத்திற்கு பின் வரும் முதல் கொண்டாட்டம்- வைரல் பதிவு
தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர் வசியுடன் குடும்ப விசேஷத்தில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
விருது வாங்கும் நேரத்தில் கணவரின் வாழ்த்து
இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தற்போதும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் பிரியங்காவிற்கு Best Entertainer விருது கொடுக்கப்பட்டது. அப்போது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து வசி ஒரு காணொளியொன்றை பகிர்ந்திருந்தார்.
அதில், “உன்னுடைய வேலையில் மிகக் கவனமாக இருக்கிறாய். அது தான் உன்னுடைய வெற்றிக்கு காரணம். இந்த விருதைப் பெறுவதற்கு நீ தகுதியானவள் தான். என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் இருக்கும்..” என கூறியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதே சமயம் இன்றைய தினம் பிரியங்கா கணவர் வசியின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW