திருமண நாளை இத்தாலியில் கொண்டாடிய பிரியங்கா தேஷ்பாண்டே! குவியும் லைக்குகள்
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது காதல் கணவர் வசி சாச்சியுடன் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை அசத்தலாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார்.

கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்துக்கு முன்னர் இருந்ததை விட இப்போது மிகவும் அழகாக தோன்றுகின்றார். தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில், கணவருடன் இத்தாலியில் முதலாம் ஆண்டு திருமண நாளை அசத்தலாக கொண்டாடி பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |