vj மணிமேகலைக்காக மேடையில் கண்கலங்கிய T.ராஜேந்தர்! வைரலாகும் எமோஷனல் காட்சி
தொகுப்பாளினியாக 15 ஆண்டுகளை நிறைவு செய்த vj மணிமேகலைக்கு சிங்கிள் பசங்க நிகழ்ச்சி மேடையில் ஜீ தமிழ் குடும்ப விருது வழங்கி கௌரவிக்கப்ட்ட போது, T.ராஜேந்தர் எமோஷனலாகி பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜே மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களுள் ஒருவர் தான் மணிமேகலை.சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய இவர் மேலும் பிரபல்யம் அடைந்தார். கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. அதைடியெல்லாம் கடந்த தனது காதல் கணவருடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றார்.

கடந்த வருடம் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சயில் பிரியங்கா உடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியது இணையத்தில் புயலை கிளப்பியது.
அதனை அசால்ட்டாக சமாளித்து விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஜீ தமிழ் பக்கம் வந்துவிட்டார்.

தற்போது சிங்கிள் பசங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். தொகுப்பாளினி என்பதையும் தாண்டி மணிமேகலையின் பங்கு அந்த நிகழ்ச்சியில் அதிகமாகவே இருந்தது வருகின்றது.
வித்தியாசமான பாணியில், வெற்றிநடை பேட்டுவரும் இந்நிகழ்சியில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
T ராஜேந்தர் எமோஷனல்
இந்த நிகழ்சியில், நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், தொகுப்பாளினியாக 15 ஆண்டுகளை நிறைவு செய்த vj மணிமேகலைக்கு இந்த நிகழ்ச்சியின் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதன் போது, TR.ராஜேந்தர் எமோஷ்னலாக கண்கலங்கியபடி மணிமேகலையை வாழ்த்தி பேசிய காணொளி இணைத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |