சிகிச்சை முடிந்து வீல் சேரிலேயே வீட்டுக்கு வந்த அர்ச்சனா.. குரல் இப்படி ஆகிவிட்டதா?
விஜே அர்ச்சனா சமீபத்தில் மூளையில் CSF லீக் எனப்படும் பிரச்சனை இருக்கிறது என பரிசோதனையில் தெரியவந்ததால் அதை சரிசெய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
மேலும், இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், அவர் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் அறுவை சிகிச்சைக்கு பின் மகள் சாரா வெளியிட்ட பதிவில் அர்ச்சனாவுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், எனினும் அவர் இன்னும் கண் முழிக்க வில்லை.
ஒரு வார காலம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின் வீடு திரும்புவார் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து அர்ச்சனா தற்போது வீட்டுக்கு வந்து இருக்கிறார். அவர் வீல்சேரில் தான் வந்திருக்கிறார்.
அந்த வீடியோவை அவரது மகள் youtube சேனலில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அர்ச்சனா மிகவும் எமோஷ்னலாக பேசுகிறார். அவரது குரலும் அப்படியே மாறி இருக்கிறது. அதை பார்த்து ரசிகர்களும் ஷாக் ஆகி இருக்கிறார்கள். அர்ச்சனாவின் பழைய கண்ணீர் குரல் எங்கே என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட அவரின் வீடியோவை இங்கே க்ளிக் செய்து காணலாம்......