நிறைவேறாமல் போன விவேக்கின் இறுதி ஆசை!
ஷங்கர் தனது அடுத்த படத்தை அறிவித்திருப்பதால், 'இந்தியன் 2' படத்தின் நிலை என்ன என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படம் 'இந்தியன் 2'.
படப்பிடிப்பு தளத்தில் விபத்து, சங்கர்- லைகா கருத்து மோதல் உள்ளிட்ட பல காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தியன் 2 படத்தை முடிக்காமல் மற்ற படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் நீதி மன்றினை நாடியது.
எனினும் பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட லைக்கா - சங்கர் பிரச்சினைக்கு நீதி மன்றத்தினால் கடந்த மாதம் ஒரு முடிவு கிடைத்தது. சங்கருக்கு ஏனைய படங்களை எடுக்க நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சங்கர் ராம் சரண் படத்தின் முதற்கட்ட பணிகளை கவனிக்கவுள்ளார்.
இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கரும் கமலும் நீண்ட காலமாக முயற்சித்து வந்தனர்.
ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது முதலே இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கி விட்டது. முக்கியமாக இந்த படத்தில் தான் விவேக் இறுதியாக நடித்திருந்தார்.
அது மட்டும் இல்லை இந்த படத்தில் தான் கமலுடன் நடிக்க வேண்டும் என்ற அவரின் கனவு நிறைவேறியது. அந்த ஆசை முழுமை அடையாமல் விவேக் மறைந்திருந்தாலும் ரசிகர்கள் அவரை திரையில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தார்கள்.
தற்போது எல்லாம் கேள்வி குறியாகி விட்டது. சங்கர் தனது அடுத்த படங்ளை எடுக்கும் வேலைகளில் தற்போது மும்முரமாக உள்ளார். அதே போல உலகநாயகன் கமலும் தற்போது விக்ரம் படத்தினை விரைவில் நடித்து முடிக்க உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடியாக விக்ரம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இப்படியான சூழ்நிலையின் தான் இந்தியன் 2 பற்றி ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கவலை வெளியிட்டு வருகின்றனர். பொருத்திருந்து பார்ப்போம் இந்தியன் 2 விவகாரம் அப்படியே ஓரம் கட்டப்படுமா? இல்லை மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்று.