விஜய்க்கு யாரும் கொடுத்திராத பரிசை கொடுத்த விஷால்! மனதார நன்றி சொன்ன முதலமைச்சர்
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யை நடிகர் விஷால் நேரில் சந்தித்து விஜய்க்கு ஒரு பரிசையும் வழங்கி உள்ளார்.

முதல்வர் விஜய்
நடிகர் விஷால் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு கொடுத்த பரிசு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஷால் தனது 'தேவி அறக்கட்டளை' ஒவ்வொரு ஆண்டும் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
விஷால் எதாவது ஒரு நிகழ்ச்சிகளில் பற்கேற்றாலோ அல்லது புகழ்வாய்ந்த நபர்களை சந்தித்தாலோ அங்கே வழங்கப்படும் வழக்கமான பொன்னாடை மற்றும் பூங்கொத்துகளை தவிர்த்து வருகிறார்.

சமீபத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த விஷால் பூங்கொத்து பொன்னாடைகளை தவிர்த்து விஜய்க்கு மறக்க முடியாத பரிசை கொடுத்தார்.
அவருக்குப் பரிசு வழங்குவதற்குப் பதிலாக, விஜய்யின் பெயரில் மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
இதுதொடர்பான மாணவிகளின் விவரங்கள் அடங்கிய கடிதத்தையும் அவர் நேரில் வழங்கினார்.

கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?
அந்த கடித்ததில் "உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், மக்கள் சேவையில் உங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
உங்கள் மீதான நன்மதிப்பு மற்றும் பாராட்டின் அடையாளமாக, பின்தங்கிய சூழலில் உள்ள மூன்று மாணவிகளின் உயர் கல்விச் செலவை உங்கள் பெயரில் ஏற்று நடத்த நான் முடிவு செய்துள்ளேன்.
தற்காலிகமாக இருக்கும் ஒரு பூங்கொத்தை வழங்குவதற்குப் பதிலாக, ஒரு குழந்தையின் கல்விக்கு ஆதரவளிப்பது நீண்டகால நற்பலனைத் தருவதோடு, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த எளிய முயற்சியை அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மக்களுக்கான உங்கள் பொதுப்பணியில் உங்களுக்குத் தொடர்ந்து வலிமையும், நல்வாழ்வும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று விஷால் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷாலின் பரிசை பெற்ற முதல்வர் அவருக்கு மதார வாழ்த்து கூறி "உங்களின் இத்தகைய உன்னதமான சமூக சேவை முயற்சி தொடர்ந்து தொய்வின்றித் தொடரட்டும்" என மனதார வாழ்த்தி அனுப்பி உள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |