திருமண செலவில் கண்டிப்பு காட்டிய ராஷ்மிகா - அதுவும் சரிதானே!
நடிகை ராஷ்மிகா மந்தானா தன்னுடைய திருமணத்திற்கான செலவு பற்றி விஜய் தேவர்கொண்டா குடும்பத்திடம் பேசிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் நிறைய திரைப்படங்களை சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்க பிடிக்கவே அனைத்து படங்களும் மாஸ் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் இவர்கள் இருவர் பற்றியும் இணையத்தில் காதலிக்கிறார்கள் என பல தகவல்கள் வந்தன. அதற்கு விஜய் தேவர்கொண்டாவும் சரி ராஷ்மிகா மந்தானாவும் சரி எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் கொடுக்காமல் இருந்தார்கள்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் ராஷ்மிகா மற்றும் விஜய் தெவர்கொண்டா அவர்களுடைய இன்டாகிராம் பக்கத்தில் விரோஷ் வெட்டிங் என்ற பதிவை பதிவிட்டு வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கான செலவு பற்றி இணையத்தில் ஒரு பதிவு வெளியாகி உள்ளது.

திருமண செலவு
திருமணத்திற்கு பல கோடி கணக்கில் செலவு வருகிறது. விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் நாங்களே எல்லா செலவையும் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.
ஆனால் ரஷ்மிகா இதற்கு சம்மதிக்கவில்லை. அவர் கூறி இருக்கிறார் எத்தனை கோடிகள் ஆனாலும் சரி நான் வந்து வாழப்போகும் வீடு அது நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்ய போகின்றோம்.
அப்படி இருக்கையில் உப்படி ஒருவர் மட்டும் செலவு பார்ப்பது. நாங்கள் இருவரும் சேர்ந்தே இந்த திருமணத்தை நடத்துகிறோம் என மிகவும் கண்டிப்புடன் கூறி உள்ளார். இதனால் விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினர் சரி என்று கூறினார்கள் என்று கூறப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |