தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை
நடிகர் மாதவன் சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் தன்னுடைய காதல் கதை பற்றி வெட்கப்பட்டுக்கொண்டே மகிழ்ச்சியாக பேசிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் மாதவன் காதல் கதை
தமிழ் திரையுலகின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவருக்கு என்று தமிழ் திரையுலகில் மட்டுமல்ல ஹிந்தி திரையுலகிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
தனது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் கல்லூரி பெண்களின் சாக்லேட் பாயாக இருந்தவர் மாதவன்.

கடந்த 2000-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’அலைபாயுதே’திரைப்படத்தின் மூலம் இவர் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார்.
இவருக்கு அலைபாயுதே திரைப்படம் ஒரு அடையானத்தை எடுத்து கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
காதல் திரைப்படங்களில் மாதவன் நடித்தால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம். இந்த நிலையில் சமீபத்தில் மாதவன் பேசிய பேட்டயில் அவரது காதலியை அவர் எப்படி என்பது பற்றி பேசி உள்ளார்.

மாதவனின் காதலி
மாதவன் நடிக்க வருவதற்கு முன்னர் public speaking மற்றும் communication skills பற்றி பாடல் எடுக்கும் ஆசிரியராக பணியாற்றினாராம். அங்கு இப்போது திருமணம் செய்திருக்கும் தன் மனைவி சரிதாவை சந்தித்துள்ளார்.
தன்னிடம் மாணவியாக ublic speaking மற்றும் communication skills கற்றுக்கொள்ள வந்த சரிதாவை மாதவன் காதவித்து உள்ளார். அதிலும் அவர் கூறி இருக்கிறார் படவிழா, பார்ட்டி போன்ற இடங்களில் எல்லாம் தன் மனைவியை பார்க்கவில்லையாம்.

அவர் முதன்முறையாக பார்த்தது வகுப்பறையில் தான் என கூறி உள்ளார்.
இந்த சந்திப்பில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. 8 வருடங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 1991-ஆம் ஆண்டு மாதவன் - சரிதா பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |