Viral Video: IPL கோப்பையை வென்ற RCB- மைதானத்தில் கதறி அழும் கோலி
IPL ஒரு விளையாட்டாக இருந்தாலும் கடந்த 17 வருடங்களாக தோல்வியை சந்தித்த RCBஅணி, 18ஆவது வருடத்தில் வெற்றி கோப்பை தன்வசப்படுத்தியுள்ளது.
குஷியில் விராட் கோலி
கடந்த 17 வருடங்களாக பல அவமானங்களையும், விமர்சனங்களையும் RCB அணி சந்தித்தாலும், அதற்கு ஆதரவாக இன்றும் பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
RCB அணி வெற்றிப் பெற்றதை பார்த்த அணி தலைவர் விராட் கோலி (Virat Kohli) அவர்கள் கண்ணீருடன் மனைவியை கட்டியணைக்கும் காட்சி பார்ப்பவர்களை கவலையடைய வைத்துள்ளது.
இது ஒரு புறம் இருந்தாலும், 17 வருடங்களாக தோல்வியை சந்திக்கும் அணிக்கான ரசிகர்களுக்கு, இந்த வருடம் கிரிக்கட் விருந்து போட்டது என்றே கூற வேண்டும். அணியுள்ளவர்கள் போன்று ரசிகர்களும் தங்களின் வீடுகளில் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்கள்.
வெற்றியை கொண்டாட வார்த்தைகள் இல்லாமல் வாயில் கை வைத்தப்படி, ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். விராட் கோலி எப்படியாவது தனது கையில், IPL கிண்ணத்த ஒரு தடவையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மற்றும் அவருடைய முயற்சிக்கான பலனே இது? என செய்திகள் வெளியாகி வருகின்றன.
விராட் கோலி கண்களில் இருந்து வலியும் கண்ணீருக்கு ஏகப்பட்ட அவமானங்கள் மற்றும் விமர்சனங்கள் உள்ளன. மக்களின் வேண்டுதல்கள் இன்று பலித்து விட்டது.
இந்த பெயர் எத்தனை வருடங்கள் சென்றாலும் இனி மக்கள் மத்தியில் போகாது. “இப்படியொரு அணி தலைவர் இருந்தார். அவருடைய முயற்சிக்கான வெற்றியே இது?” என கருத்துக்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
