அண்ணனின் திருமணத்தில் நள்ளிரவில் தங்கை செய்த தரமான சம்பவம்.... என்ன ஒரு மனசு!
மேற்கு வங்க ரயில் நிலையத்தில் இரவில் பெண் ஒருவர் உணவு விநியோகித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்ததில், அவரது அண்ணன் திருமணத்தில் உணவு மீதம் இருந்ததாகவும், அதனை வீணடிக்க விரும்பாமல் இங்கு உள்ளவர்களுக்கு கொடுக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நிலஞ்சன் மொண்டல் என்ற புகைப்படக்காரர் அதிகாலை 1 மணியளவில் பாபி கர் ரணகாட் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது இந்த காட்சிகளை புகைப்படம் எடுத்துள்ளார்.
இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. மேலும் அந்த பதிவில், ரயில் நிலையில் சம்பிரதாய உடையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் உணவு நிறைந்த பாத்திரங்களுடன் அமர்ந்திருந்தார்.
அவர் உணவு தேவைப்படுபவர்களுக்கு காகிதத் தட்டுகளில் உணவு பரிமாற ஆரம்பித்தார். இதுகுறித்து பேசிய அந்த பெண், விழா முடிந்ததும் ஏராளமான உணவுகள் மீதிம் இருந்ததால் அதனை இங்கு கொண்டு வந்தேன் என்றார்.
அவரின் கருணை உணர்வை கண்டு நான் வியந்தேன் என குறிப்பிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணில் செயலை பாராட்டி வருகின்றனர்.