தமிழர்களை மிரள வைத்த வெள்ளைக்காரி! அம்மி மிதித்து... அருந்ததி பார்த்து... திருமணம் செய்த வெளிநாட்டு ஜோடி
தமிழர்கள் இன்று வெளிநாட்டு கலாச்சாரத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் போது வெளிநாட்டவர்கள் தமிழ் கலாச்சாரத்திற்கு ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
இன்று உண்மையிலேயே தமிழ் பாரம்பரிய அடையாளங்கள் தமிழர்களால் காக்கப்படுகிறதா? கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா? என்பதை பாரம்பரியம் பற்றி பெருமை பேசும் ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.
வேட்டி கட்டினால் கவுரவ குறைச்சல் என்று கருதும் காலத்தில் வெளிநாட்டவர்கள் வேட்டி கட்டுவதை பெருமையாக கருதுகிறார்கள்.
அது ஒரு புறம் இருக்க வேட்டி கட்டக்கூட தெரியாத நிலையில் தமிழ் இளைஞர்கள் இருப்பது வேதனையானது.
தமிழ் பெண்கள் பாதிப்பேரை இன்று புடவையில் காண்பது அரிது. அந்த அளவு வெளிநாட்டு மோகம் குடி கொண்டு விட்டது.
இப்படியான சூழலில் வெளிநாட்டு ஜோடி தமிழர் பாரம் பரிய முறைப்படி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்து வியப்படைய செய்திருக்கின்றார்கள்.
தமிழர் பாரிம்பரியத்தை எந்த அளவு நேசிக்கின்றார்கள் என்பது அவர்கள் அணிந்திருக்கும் உடையில் தெரிகின்றது. தமிழர்களையே வாயடைக்க வைத்த இந்த ஜோடியை நாமும் வாழ்த்துவோம்.